
“ஏஐ-க்கு மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளின் தன்மையை புரிந்துகொள்ள முடியாது. ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை.” - Hayao Miyazaki
வாட்ஸ் அப்பில் சாதாரணமாக நாம் அனுப்பும் மெசேஜ்களைக் கூட ஏஐ டூல்களைப் பயன்படுத்தி மெருகேற்றும் காலத்தில் இருக்கிறோம். எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என ஆரம்பித்து எல்லாமே ஏஐ என்று விந்தையான, சவாலான ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், வேலைவாய்ப்புகள் எல்லாம் பறிபோகாது நாம் தொழில்நுட்பத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால், அது நமக்கு உறுதுணை அம்சமாகத்தான் இருக்கும் என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் ‘வேலையை விடுங்கள்... கலைக்கும் ஆபத்து’ என்று உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uBMNoli
0 Comments