இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

யூடியூப் மானிடைசேஷன் புதிய விதிகள்: யார் யாருக்கு வருவாய் பாதிக்க வாய்ப்பு? - ஒரு தெளிவுப் பார்வை

சென்னை: யூடியூப் வீடியோ தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சில அப்டேட்கள் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக உண்மைத்தன்மை இல்லாத ஸ்பேம் கன்டென்ட், மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் ஒரே கன்டென்ட்கள் அடையாளம் காணப்படும் எனத் தெரிகிறது. இதனால் யூடியூப் தளத்தில் பதிவிடும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மானிடைசேஷன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் புது சிக்கல் எழுந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 200 கோடிக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை பார்க்க முடியும். யூடியூப் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு அதன் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை யூடியூப் பகிர்ந்து வருகிறது. யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த நிலையில்தான் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் புதிய அப்டேட் அறிமுகமாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rJpNy6c

Post a Comment

0 Comments