
ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்சாக மொழி பெயர்க்கும் உலகில் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்வால். வாராணசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்கள் பேசுவதை போல் குரலை நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யும் லூனா என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார். இது பேச்சு வடிவிலேயே விரைவாகவும், உணர்வுபூர்வமாகவும் குரல் வடிவிலேயே மொழி பெயர்க்கிறது. இதில் உள்ள தொழில்நுட்ப கட்டமைப்பு பேசும் தொனியை மாற்றவும், பாடவும் அனுமதிக்கிறது. இது மனிதர்களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6G4sALJ
0 Comments